- Back to Home »
- மறக்காத நினைவுகள்
Wednesday, September 5, 2012
இன்றைக்கு இந்தியாடா ஆசிரியர் தினமாம்... சரி விடுங்க.. நாம கொண்டாடினா என்ன தப்பு...
இந்த உலகம் கொண்டாடுற தினத்தில் எனக்கு பிடிச்ச தினம்.. என் வீட்டில் நிறைய பேரு ஆசிரியர் என்பதால்... எனக்கு ஆசிரியர்கள் மேல பெரிய ஈடுபாடு இல்ல எங்கிறதுதான் உண்மை...
இருந்தாளும் என் எல்லா ஆசிரியர்களையும் எனக்கு பிடிக்கும்..ஆசிரியர்களை பல விதத்தில் பிடித்துபோகும் நமக்கு..
பல ஆசிரியர்கள் மனதில் பதியும் வகையில் பாடம் எடுப்பார்கள். அவ்வாறு பல ஆசிரியர்களை என் பாடசாலை வாழ்வு சந்திந்துள்ளது..ஆனால் சில ஆசிரியர்கள் வகுப்பறைக்கு பாடத்துக்கு வெளியே நம்மை ஈர்க்கும்.
அவ்வாறு எனது ஆரம்ப பாடசாலையில் வயசான ஆசிரியர்கள் மத்தியில் அறிமுகமான ஒரு இளம் சமூக கல்வி ஆசிரியர், அவருட பாடத்தில் பெரிய ஆர்வம் இல்லை என்றாலும்.. (ஏன் எனின் எங்களுக்கு வழமையான பாட ஆசிரியை எங்களுக்கு அதிகம் பிடிந்திருந்தால்..) அவரின் வெளிக்கள செய்யப்பாடுகள் அதிகம் பிடிக்கும்..
முதலில் எங்களை விளையாட்டு போட்டிகளில் பங்குபற்ற வைத்தார்.. அது நிறைய மாணவருகளுக்கு பெரிய உற்சாகமாக இருந்தது.. அந்த மாணவர்கள் பிறகு தேசிய பாடசாலை ஒன்றுக்கு தொடச்சியான சம்பியன் வெற்றியை ஆரம்பித்தார்கள் என்பது கவனிக்கப்படாத உண்மை. அவர்தான் அப்போது நாங்கள் முதலில் சந்தித்த... “நாங்கள் நினைப்பதை சொல்லாது புரிந்து கொள்ளும்” ஆசிரியர்..நாங்கள் பல மேடை நாடங்கள் நடித்தும்... அவர் தயார் செய்த ஒரு நாடகம் கடைசி வரை அரங்கேட்ட முடியாது போன குறை இன்னும் எனக்குள் இருக்கிறது. எதிலும் அதை அவ்வாறே நம்பாமல், நமக்கும் அதில் சிந்திப்பதுக்கு ஒரு வெற்றிடம் உண்டு என்று புரிய வைத்தவர்.
பிறகு என் சாதாரண தரத்தில் கணிதபாட ஆசிரியர்.. “நம்மையே நமக்கு நம்ப வைக்கும் ஆற்றல்”.. உன்னால் முடியும் என்ற இலகுவான வார்த்தைகளால் நம்பிகையூட்டியவர். இப்போது யாரும் சொன்னால் விழுந்து விழுந்து சிரிப்புவரும் வழக்கமான வார்த்தைகள்தான் அவர் சொன்னது... ஆனால் அப்போது அவர் சொன்ன வார்த்தைகள், என்ன செய்வது என்று அறியாமல்... இதை யாராவது கடத்திவிடமாட்டார்களா.. என்று தவிர்த்த நிலையில் உளவியல் ரீதியில் மனதை பலப்படுத்தியுள்ளார் என்பது இப்போது புரிகிறது.. இவ்வாறு என் வகுப்பில் சில மாணவர்களின் எதிர்கால வாழ்வை எளிய சமன்பாடு முலம் 180 பாகையில் திருப்பிப்போட்டார்.
இவ்வாறு நிறைய ஆசிரியர்கள்.....எழுதபோனால் எனது 16 வருடம் நாலு பாடசாலை வாழ்வையும் எழுதி கடுப்பேற்ற விரும்பம் இல்லை.13 வருடந்தானே.. என்ன 16 வருடம்??? கணக்கில் பிழையில்லை.. இதுக்கு என் கூடப்படிச்ச எதாவது ஒரு நாதாரி உங்களுக்கு கீழ நிச்சயம் விளக்கம் தரும்...
எனக்கு இப்போதும்.... அன்று போல் ஆசிரியர் தினத்தில் பரிசளித்து கொண்டாட ஆசை.. என்ன செய்ய.. “சேர்... ஆ..ஆஆ..க .. (அப்படியேதான் இருக்கிங்க)” என்று கொடுப்புக்குள் சிரிக்கும் “நான் படித்து... நான் முன்னேறி... நான் பதவி அடைந்தேன் ” என்று சொல்லும் படிச்சு கிழிச்ச சமுகத்தில் வாழ்வாதால் சாத்தியம் இல்லை..