Archive for August 2012

ஆண்கள் பாவம் நீதிகதை 01

நேற்று பழைய ஸ்கூல் நண்பன எதிர்பாராம சந்திக்க கிடைத்தது. நீண்ட நாளைக்கு பிறகு சந்திப்பு... அவன் என்னோட ஒன்பதாம் வகுப்பு படிச்சவன்
(அவன் 2 வருசம் முட்ட வாங்கி பிறகு இணைந்தோம் ). 

 நான் பல வருசம் கழிச்சி புரிஞ்சி விசயத்த அவன் அப்பவே  நல்ல முடிவு எடுத்து படிப்ப கை விட்டுட்டான். பிறகு கதுவல, நிட்டப்புவ, கொழும்பு, காலி ஹோட்டல் வழிய ஒரு 3 வருசம் குடும்பத்துக்காக கஸ்டப்பட்டு. 

 கிடையில நிறைய சப்புமாருக்கிட்ட விஸாக்கு காசு குடுத்து ஏமாத்து ஒரு வழியா குவைத்தில 2 வருசம் ஹவுஸ் ரைவரா கஸ்டப்பட்டு பிறது கட்டாருல இப்ப 3 வருசமா ஒரு கம்பனில நல்ல சம்பளத்தில இருக்கான்.

(இது முன்கதை சுருக்கம்.... இப்ப விசயத்துக்குவாரன்)






நண்பன்- டேய். என்டா..எப்படா இங்க வந்த.

நான்- இப்பான் 

நண்பன்- என்னடா இப்படி தேளிஞ்சிட... !!! வெள்ளையாகி....!!! முன்னையல்லாம் சூடமீன் மாதிரி இருப்ப.... ஹ..ஹஹஹ...

(இப்படி ஆரம்பிச்சி .. கூட படிச்சவன், ஊரு தருதலை இருந்து பெரும்தலை வர கழுவி ஊத்தி.. கடைசியா கல்யாண கதை வந்திக்கி.)

நான்- வீட்ட எல்லாரும் கல்யாணம் முடிச்சிட்டாங்கலாடா?

நண்பன்- ஓம் மச்சான்.. நாநா அப்பவே கல்யாண முடிச்சிட்டாரு தெரியும்தான உனக்கு, ராத்தாக்கு வீடு கட்டி முடிஞ்சிட்டன். ஒரு   மருமகள் இருக்காள் சரியான கதகாரி.. தங்கச்சிக்கு இப்பதான் வீடு முடியிற தருவாயில இருக்கு... 

நான் - மாப்புள பாத்தாச்சா ?

நண்பன்- ஏன்டா அத கேக்கா...  அவங்க உம்மா சொல்லுறா  
சும்மா ஊடு கட்டினா சரிவராதாம்..அப்ஸ்சயாரு வேணுமாம்..
ஏன்டா அவரு கிரச்சுவட்டு மாப்பிளையாம்.
கவும்மட்டு வேல பார்க்கிற மாப்பிள பார்த்தா அவருக்கு பல்ஸர் பைக்கும் கக்கிலி 5லட்சமும் தரனுமாம் .

நான் - ம்...

நண்பன்-   இங்க கஸ்ட பட்டு... இந்த வெயில கருவாடா காஞ்சி உழைச்ச காச... எவ்வளவு லேசா கக்கிலி கேக்காங்கடா... இவனல்லா கட்டி வைச்சி அடிச்சிசாத்தான் சரிபட்டு வரும்.

நான்- என்ன செய்ய அப்படிதான் இருக்கு ஊருநிலம
 ( தானாத்தா வந்துமாட்டிமோ.. இப்படி கடுப்பா இருக்கான்.... ரூட்ட மாத்துடா கைப்புள்ள ) 

பிறகு திசைமாரிய பேச்சு... 15 நிமிடங்களுக்கு பிறகு... நமக்கும் ஞாபக மறதிக்கும் உள்ள உறவ சொல்லவா வேணும்.

 நான்- எப்படா உனக்கு கல்யாணம்?

நண்பன்- (லைட்டா சிரிப்புடன்)... இப்ப என்ன அவசரம்? 

நான்- வீட்ட நிறைய பேரு படை எடுக்காங்கலாம்? ( இப்படி ஒத்தன் இருக்கிறதே.. கண்ட பிறகுதான் ஞாபகமே வந்த.. அதுக்குள்ள ஒரு பச்ச பொய்)

நண்பன்- ம்... வருதுதான் மச்சான். அமையலடா...

நான்- என் வெள்ள பொண்ணு தேவையோ...

நண்பன்- இல்லடா... ராத்தா போய் பாத்த.. பரவால்ல வடிவுதானாம். மௌவிக்கி ஓதின புள்ளையாம். 

நான்- பிறகு 

நண்பன்- அவங்க வாப்பாக்கு மார்கட்டு யாவாரம்.. ஒரு வீடு கட்டி மூத்த புள்ளைக்கு முடிச்சி குடுத்திருக்காரு.. இப்ப வயசாகிட்டு, அங்க இருக்கிற பழைய வீடுதான் திருத்தி தாறாங்க பின்னுக்கு கிடக்கிற வளவையும் அந்த புள்ளைக்கு எழுதுறாங்களாம் .

நான்- பிறகு என்னடா...

நண்பன்- புடிச்சித்தான் இருக்கு... இந்த பெரியம்மா தான்...அந்த புள்ளட வாப்பாட பேருல அங்காலபக்கம் 2 ஏக்கர் வயல் கிடக்காம்.....  

நான்- போடா டேய்..... @!@##$%%^^&&&&&*@*@ நல்ல வருது வாய்ல...

கதை நீதி - அதையும் நான் தான் சொல்லணுமா.. 

FM

FM





Popular Post

Powered by Blogger.

- Copyright © நிழலின் தடம் -Metrominimalist- Powered by Blogger - Designed by Johanes Djogan -