Saturday, February 4, 2012




பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
யாரசூலல்லாஹ் யாஹபீபல்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும்
தமிழ் தென்றல் தலைவர்க்கு ஸலாம்!
தலைசாயா தலைவர்க்கு ஸலாம்!
தகைசார் எம்பிக்கு ஸலாம்!
தம்பி எம்பிக்கு ஸலாம்!
சங்கைமிகு சபையோருக்கு ஸலாம்!
யாவர்க்கும் ஸலாம்!
அறியாமைக் கோரமும் அண்ணலார் வீரமும்
நிரந்தரமான அமைதிக்காய்
நிரந்தரமாய் போர் புரியும்
உலகின் அறியாமைக் கோரத்துள்
வாழுகிறேன் யாரசூலல்லாஹ்!
திட்டமிட்டே மனிதத்தேவைகள்
தேவைக்கதிமாய் ஆக்கப்பட
தேவைக்கதிமாய் உழைக்கும்
தேவையற்ற அவதிக்கு ஆளான
பொருளியல் அறியாமைக் கோரத்துள்
வாழுகிறேன் யாரசூலல்லாஹ்!
பரபரப்பும் பதட்டமும் தொற்றிக்கொள்ள
மனிதன் தனிமைக்குள் அகப்பட்டு
சமூக இயந்திரத்தின் உதிரிப் பாகங்களாய்
ஆகிவிட்ட அகிலத்தின் அறியாமைக் கோரத்துள்
வாழுகிறேன் யாரசூலல்லாஹ்!
சந்தேகிப்பதே மனித பாக்கியமென அறிந்துள்ள
பகுத்தறிவின் அறியாமைக் கோரத்துள்
வாழுகிறேன் யாரசூலல்லாஹ்!
மனிதர் சுதந்திரமாய் நடமாட என்றுள்ள வீட்டை
தளவாடங்கள் நிறைத்து சிறைக்கு நிகர் செய்து
பண்ட நுகர்வு வெறி தலைக்கேறி
அறியாமைக் கோரத்துள் வாழுகிறேன் யாரசூலல்லாஹ்!
மாணவக் கொள்கலன்களுக்குள்
அதிகமாய் நிரப்புவோர் நல்லாசிரியர்
நிரப்புவதை எளிதாய் ஏற்போர் நல் மாணாக்கர்
ஆசானுக்கு எல்லாம் தெரியும்
மாணவர்;க்கோ ஏதும் தெரியாதென்ற
சேமிப்புக் கிடங்குக் கல்விமுறை
அறியாமைக் கோரத்துள்
வாழுகிறேன் யாரசூலல்லாஹ்!
அறிந்தவற்றின் அறிவைப்பற்றிய செருக்கை அழித்து
அறியாதவற்றின் அறியாமையை ஏற்கும் கருத்தைப் புறந்தள்ளும்
அறிவுலக அறியாமைக் கோரத்துள் வாழுகிறேன் யாரசூலல்லாஹ்!
“நான்” வெற்றிகொண்ட “நீ”யை வெறும் “அது”வாக்கி
நானின் இருப்பை சாத்தியமாக்குவதே
நானல்லாத “நீ”தான் என்பதையும்
அந்த “நீ”க்கும் ஒரு “நான்” உண்டு என்பதையும்
உணர்வதே வீரம் என்றுணரா
அறியாமைக் கோரத்துள் வாழுகிறேன் யாரசூலல்லாஹ்!
நிரந்தரமான அமைதிக்காய்
நிரந்தரமாய்; போரை நிறுத்தும் மார்க்கத்தை
உங்கள் மார்க்கத்தின் முகமனிலே தந்தீர்
அஸ்ஸலாமு அலைக்குமென யாரசூலல்லாஹ்!
நான் என்பது எனக்குள்ளில்லை – அது
எனக்கு வெளியில் கிடக்கும் சொத்தெனச் சொல்லி
வீரம் விளைவித்து வாழ்ந்தீர் யாரசூலல்லாஹ்!
பொங்கி எழுவோர் பொருதிச் சாவோர்
சந்திரனில் செவ்வாயில் மற்றும் கோளங்களில்
ஆயுதக் கிடங்கிற்கிடம் தேடும் வல்லோர்
இவரெல்லாம் வீரரல்லர்
பொறுமை காப்போரே வீரரென்று போற்றி வாழ்ந்தீர் யாரசூலல்லாஹ்!
நிச்சயமில்லா உலகின் நிச்சயத்தை வலியுறுத்தி
அறிவிழந்தோர் வாழ்ந்திருந்த காலத்தே
நிச்சயமாய் இவ்வுலகு நிச்சயமற்றதென்றோதி
அச்சமற்று வாழ்ந்த வீரர் நீரே யாரசூலல்லாஹ்!
பத்ருப் போரில் ஆயிரத்தை
முந்நூற்றிப் பதின்மூன்றால் முறியடித்து
கையிலேந்தும் வாளிலில்லை வீரம் – அது
நெஞ்சிலேந்தும் ஈமானில் உள்ளதென
நிரூபித்து வாழ்ந்தீர் யாரசூலல்லாஹ்!
கஃபத்துல்லாவிற்கு கல் வைக்கும் கலவரத்தை
போர்வை நுனியால் அடக்கி
விட்டுக்கொடுப்பும் மதிநுட்பமும் வீரமே என
விதிசெய்து வாழ்ந்தீர் யாரசூலல்லாஹ்!
தற்காலிக தலைமறைவும்
தக்க வீரமே என தகையிட்டீர்
தவ்ர் குகையில் யாரசூலல்லாஹ்!
வீரத்தின் பிறிதொரு பரிமாணம் புலப்பெயர்வெனவும்
புகலிடத்தில் அரசமைப்பது வீரத்தின் உச்சமெனவும்
மதீனத்து மாநகரில் காண்பித்தீர் யாரசூலல்லாஹ்!
உடன்பட முடியாத விடயத்தை
உடன்படிக்கை முடித்துவைக்கும் எனும் தத்துவத்தை
ஹ_தைபியாவில் தந்துவைத்தீர்
தந்திரத்தை, உபாயத்தை
வீரமெனக் காட்டிவைத்தீர் யாரசூலல்லாஹ்!
நான் வாழும் காலத்தின் அறியாமைக் கோரம் அழியும்
என்றென்றைக்குமாக அண்ணலார் வீரம் தெளியும்
எப்போது?
அல் குர்ஆன் ஒதுபவர்க்கானதல்ல – அது
பயன்படுத்துவோர்க்கானது என்றாகும்போது!
ஸல்லல்லாஹ_ அலா முஹம்மது
ஸல்லல்லாஹ_ அலைஹிவஸல்லம்
ஸல்லல்லாஹ_ அலா முஹம்மது
ஸல்லல்லாஹ_ அலைஹி வஸல்லம்
ஸல்லல்லாஹ_ அலா முஹம்மது
யாரப்பீ ஸல்லி அலைஹி வஸல்லிம்!!

Lankamuslim.org


Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

FM

FM





Popular Post

Powered by Blogger.

- Copyright © நிழலின் தடம் -Metrominimalist- Powered by Blogger - Designed by Johanes Djogan -